கோடைக் காலம். அக்பர் இளவரசர், பீர்பால் மூவரும் உலவச் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் புழுக்கம் தாளாத அக்பர் கனமான தன் மேல் அங்கிகளைக் கழற்றிப் பீர்பாலிடம் கொடுத்துத் தூக்கி வரச் சொன்னார். அதையே தூக்கி வரச்சிரமப்பட்ட பீர்பாலிடம் இளவரசரும் தனது அங்கிகளைக் கழற்றிக் கொடுத்தார்.
இருவரின் ஆடைகளையும் சுமந்து கொண்டு வந்த பீர்பாலைக் கண்டதும் அக்பருக்கு பொதி சுமக்கும் கழுதையின் ஞாபகம் வந்து விட்டது. அக்பர் கேலி யாக, ‘என்ன பீர்பால் ஒரு கழுதையின் சுமையைச் சுமந்து வருகியர்கள் போலிருக்கிறதே?’ என்றார்.
மன்னர் தன்னைக் கழுதை என்று சொன்னதை நினைத்துப் பீர்பால் வருத்தப்பட்டாலும் அதை மறைத்துக் கொண்டு சாதுர்யமாக, ‘தவறு மன்னா, நான் இரண்டு கழுதைகளின் சுமையை அல்லவா சுமந்து கொண்டு வருகிறேன்’ என்றார்.
இருவரின் ஆடைகளையும் சுமந்து கொண்டு வந்த பீர்பாலைக் கண்டதும் அக்பருக்கு பொதி சுமக்கும் கழுதையின் ஞாபகம் வந்து விட்டது. அக்பர் கேலி யாக, ‘என்ன பீர்பால் ஒரு கழுதையின் சுமையைச் சுமந்து வருகியர்கள் போலிருக்கிறதே?’ என்றார்.
மன்னர் தன்னைக் கழுதை என்று சொன்னதை நினைத்துப் பீர்பால் வருத்தப்பட்டாலும் அதை மறைத்துக் கொண்டு சாதுர்யமாக, ‘தவறு மன்னா, நான் இரண்டு கழுதைகளின் சுமையை அல்லவா சுமந்து கொண்டு வருகிறேன்’ என்றார்.
No comments:
Post a Comment