Monday, May 24, 2010

செல்போன்,ரத்தினம்,புஷ்பராகம்.,முத்து

தொடர்ந்து 10 ஆண்டுக்கு மேல செல்போன் பயன்படுத்தறவங்களுக்கு பிரெய்ன் டியூமர் வர்றதுக்கு வாய்ப்புள்ளதுன்னு எச்சரிச்சுள்ளது உலக சுகாதார நிறுவனம் . இந்த ஆராய்ச்சியைப் பார்த்து பயந்து போன பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அரசுகள் செல்போனால் ஏற்படும் தீங்குகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு பிரச்சாரம் செஞ்சுட்டிருக்கு . செல்லுலேயே வாழ்க்கை நடத்தும் இளைஞhகள் உஷாரா இருப்பது நல்லது .


.
ரத்தினம் ( Sapphire ) :

அலுமினியமும் ஆக்ஸிஜனும் எக்குத்தப்பாகச் சேர்ந்த கலவைதான் ரத்தினம் . காலையில் அடர் நிறத்திலும் , மாலையில் வெளிர் நிறத்திலும் ஜொலிஜொலிக்கும் . மோசஸ் 10 கட்டளைகளைத் தந்தபோது கைகளில் ரத்தினத்தையும் தந்தார் என்பவர்கள் உண்டு . 17 - ம் நூற்றாண்டில் மக்கள் யாராவது சஃபையர் அணிந்தால் தலையைத் தனியே எடுத்துவிடுவார்கள் . ஏனெனில் , அப்போது அது ராஜாஆபரணம் . அலெக்சாண்டர் , அக்பர் போன்ற மன்னர்கள் சஃபையர் அணிந்திருந்தார்கள் என்கிறது வரலாற்றுக் குறிப்பு .
புஷ்பராகம் ( Topaz ) :

' ஏழைகளின் வைரம் ' என்று இதற்குப் பெயர் . தேன் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் இந்தக் கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கும் . 18 - ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசிய மன்னர் புரகோன்ஷாவின் கிரீடத்தை அலங்கரித்த புஷ்பராகத்தின் எடை 1,680 கேரட் .
முத்து :
கடலில் சிப்பிக்கு உள்ளே செல்லும் தூசு , மணல் துகள் போன்றவையே முத்தாக உருவெடுக்கின்றது . வெள்ளை மட்டும் அல்ல ... பழுப்பு , பச்சை , நீலம் , இளஞ்சிவப்பு , கறுப்பு நிறத்திலும்கூட , முத்துக்கள் உண்டு . முழுக்க முழுக்க கால்ஷியம் கார்பனேட்தான் முத்து . கடலுக்கு அடியில் இருந்து கிடைப்பதால் ரேட் ஜாஸ்தி . இப்போது சிப்பிக்குள் செயற்கையாகத் தூசுகளை அனுப்பி முத்துக்களை உருவாக்குகிறார்கள் . கடையில் கிடைக்கும் பெரும்பாலான முத்துக்கள் செயற்கைதான் !
பவழம் :
பவழத்துக்கும் கடல்தான் வீடு . வெதுவெதுப்பான நீர்ப்பகுதியில்தான் இது விளையும் . பவழப்பூச்சி எனும் கடல்வாழ் உயிரினம் , கரையான் போல் கட்டும் புற்றே பவழப் பாறையாகிறது . ரத்தச் சிவப்பில் ஜொலிக்கும் பவழம் தான் ஒரிஜினல் . சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பவழப்பாறைகள் அழியத் தொடங்கிவிட்ட பிறகு , மார்க்கெட்டில் பவழங்களுக்கு மவுசு கூடியிருக்கிறது !
மாணிக்கம் :
மாணிக்கமும் ரத்தினமும் அண்ணன் தம்பி போல . குணாதிசயங்களில் அவ்வளவு ஒற்றுமை . பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகைக் கல்தான் இது . ஆக்ரோஷமான காதலின் அடையாளமான இது உலகக் காதலர்களிடையே ஃபேமஸ் !
வைடூரியம் :
க்ரைசோபெரில் என்ற இந்தக் கல்லின் செல்லப் பெயர் பூனைக் கண் . தமிழில் வைடூரியம் . பூமிக்கு அடியில் அதிகப்படியான அழுத்தத்தின் காரணமாக உள்ளே இருக்கும் லாவா என்கிற எரிமலைக் குழம்பு எக்குத்தப்பாக எகிறி வெளியே வந்தால் , அதுதான் வைடூரியம் . வைரம் , மாணிக்கம் என்று வலிமை வரிசைப் பட்டியலில் இதற்கு மூன்றாவது இடம் !
மரகதம் :
பச்சை நிறத்தில் பளபளக்கும் மரகதம் நோய் எதிப்புச் சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . அதனால் தம்மாத்தூண்டு இருக்கும் கல்லே சில லட்சங்கள் வரை விலை போகும் . உத்தரகோசமங்கையில் இருக்கும் மங்கள நடராஜர் கோயிலில் ஏழரை அடி உயரத்தில் மரகதத்தால் ஆன மூலவர் சிலை இருக்கிறது . பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக மரகதம் கிடைக்கிரது . அந்தப் பகுதியில் இருக்கும் தலிபான்களுக்கு அதுதான் பெரிய வருமானம் .
கோமேதகம் :
நவரத்தினங்களில் விலை குறைந்தது இதுதான் . பசுவின் சிறு நீர் நிறத்தில் இருப்பதால் , இந்தப் பெயர் .நகைகளில் பளபளப்பைக் கூட்டப் பயன்படுகிறது . ஜீரண சக்தியை வலுவாக்கும் என்பது நம்பிக்கை . இதில் டூப்ளிகேட்டை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது . அதனாலேயே கோமேதக பிசினஸ் இந்தியாவில் செம ஹிட் !


அடைமழையை ஆங்கிலத்தில் ' raining cats and dogs ' என்று சொல்கிறோம் . ஒரு காலத்தில் பிரிட்டனில் , லண்டன் போன்ற நகரங்களில் சீரான சாக்கடைகள் கிடையாது . பெருமழை பொழிந்தால் போச்சு ! தெருக்களில் அலையும் நாய்களும் , பூனைகளும் நீரில் மூழ்கி இறந்துவிடும் . மழைநீர் வடிந்த பிறகு ஆங்காங்கே தெருக்களில் அவற்றின் உடல்கள் கிடக்கும் . ஆகவே , பெரிய மழையை ' It is raining - ( there are dead ) cats and dogs ' என்பார்கள் .
' இல்லை ! இந்தச் சொற்றொடர் பண்டைய நார்வே நாட்டின் புராணத்திலிருந்து வந்தது . Norse என்கிற அந்த மொழியில் புயலுக்கு நாய் , மழைக்கு பூனை என்று உருவகப்படுத்தி இருந்தார்கள் .' என்கிறார்கள் .!



சிணுங்கல் சீக்ரெட் !
மைமோசாபூடிகா என்ற தாவரயியல் பெயர் கொண்ட தொட்டால் சிணுங்கிச் செடியைக் கவனித்தால் , அவை கூட்டு இலைகளைக்கொண்டிருக்கும் . அந்தக் கூட்டு இலைக் காம்பிற்கு அடியில் தண்டுடன் ஒட்டிக்கொண்டுள்ள பகுதி சற்று பருத்த முண்டு போல இருக்கும் . இந்த முண்டுவானது மெல்லிய சவ்வுச் செல்களால் ஆனது . இந்தச் செல்லினுள் நீர் மூலக்கூறுகள் எளிதில் சென்று வரமுடியும் .
இந்த் முண்டுவில் நீர் நிறைந்திருக்கும் போது இலைகள் விரிந்த நிலையில் இருக்கும் . இச் செடியைக் காற்று , பூச்சி , விலங்கு , மனிதன் , மழை துளி தொட சட்டென்று வெளிப் புற உணர்வுகள் உட்சென்றதும் , முண்டுகளில் இருக்கும் செல்கள் நீரை இழக்கின்றன .
இதனால் இலைகள் சுருங்குகின்றன . இதன் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வர முண்டில் நீர் நிறைய வேண்டும் . இதற்கு 15 முதல் 30 நிமிடம் ஆகும் .
இலை காம்பில் சவ்வூடு பரவல் அழுத்த வேறுபாடு காரணமாகவே இந்த இயக்கம் ஏற்படுகிறது .


விமானம் வந்த கதை .
விமானம் இந்தியாவுக்கு வந்த கதை சுவாரஸ்யமானது . பாட்டியாலா மகாராஜா 1910 ல் இந்தியாவுக்கு விமானத்தை அறிமுகப்படுத்துவதற்காக பெளல்ஸ் என்ற ஆங்கிலப் பொறியாளரை அனுப்பி , பார்மென் என்ற குட்டி விமானத்தை பிரான்ஸில் இருந்து வாங்கி வரச் செய்தார் . 1910 டிசம்பர் 11 - ம் தேதி அலகாபாத்தில் முதல் விமானம் கிளம்பியது . முதல்முறையாக விமானத்தில் ஏறிப் பறந்த இந்தியர் , காசி மகாராஜாவின் மகன் . ஹென்றி பெக்கே என்ற விஞ்ஞானி அந்த விமானத்தை ஓட்டினார் . சென்னையில் 1911 பிப்ரவரி 18 - ம் தேதி விமானம் பறந்தது . அந்தக் காட்சியைப் பார்க்கப் பொதுமக்கள் திருவிழா போலத் திரண்டு இருந்தார்கள் .
மகாத்மா காந்தி விமானத்தில் பயணம் செய்த்து இல்லை . விமானத்தில் செல்லும்படியான சந்தர்ப்பம் கிடைத்தபோதும் ' அது ஏழைகள் பயணம் செய்ய முடியாத வாகனம் . எனக்கும் அதில் பயணம் செய்ய விருப்பம் இல்லை ' என்று தவிர்த்திருக்கிறார் காந்தி . அவரது லண்டன் பயணம் கப்பலில்தான் நடந்தது . இந்தியா முழுவதும் ரயிலிலும் கார்களிலும்தான் பயணம் செய்திருக்கிறார் . இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்யாத முதல் அரசியல்வாதி காந்தியாகத்தான் இருக்கக்கூடும் .



சாதனைக்கு துணை !
மனிதனின் மாபெரும் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுவது விண்வெளிக்குச் சென்றது . இந்தச் சாதனைக்கு துணை நின்றது ஒரு நாய் என்றால் நம்பமுடிகிறதா ? ஆம் , விண்வெளியில் உயிரினம் இருக்க முடியுமா என்று ஆராய்வதற்காக முதன் முதலில் அனுப்பபட்டது ஒரு நாய்தான் . லைகா என்ற நாய் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட நாள் 1957 , நவம்பர் 3 .
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் விண்வெளித்துறையில் கடும்போட்டி நிகழ்ந்த நேரம் அது .விண்வெளித்துறையில் மைல்கல்லாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடித்தார் ரஷ்ய அதிபர் குருஷ்சேவ் . அவரது விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் விஞ்ஞானிகள் உருவாக்கிய திட்டம்தான் நாயை விண்வெளியின் புற சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி சோதிப்பது . ஸ்புட்னிக் -- 2 என்ற விண்கலம் இதற்காக வேக வேகமாக உருவாக்கப்பட்டது . மாஸ்கோ நகர வீதிகளில் திரிந்து கொண்டிருந்த மாங்குரல் ரகத்தை சேர்ந்த பெண் நாயை விண்வெளிக்கு அனுப்புவது என்று முடிவாயிற்று .
அந்த நாய்க்கு லைகா என்று புதுப்பெயரும் சூட்டப்பட்டது . ஸ்புட்னிக் - 2 புறப்படுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே லைகா அதில் ஏற்றப்பட்டது . விண்வெளியின் மேல் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும்போது உயிரினத்தின் ( நாயின் ) உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கின்றன என்று கண்டறிய சென்சார்கள் பொருத்தப்பட்டன .நாய் உண்பதற்காக ஜெல் வடிவ உணவும் தயார்படுத்தப்பட்டிருந்தது .
1957 , நவம்பர் 3 ல் லைகாவுடன் ஜிவ்வென்று விண்ணுக்கு கிளம்பியது ஸ்புட்னிக் - 2 . ஆனால் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே நாய் உடலில் பொருத்தப்பட்டிருந்த டிரான்ஸ்மிட்டர்களில் இருந்து சிக்னல்கள் வரவில்லை .உடனேயே விஞ்ஞானிகளுக்கு புரிந்து போயிற்று . லைகா விண்வெளியில் இறந்துவிட்டது என்று . லைகாவின் கதி இதுதான் என்று முன்கூட்டியே தெரிந்திருந்ததால் விஞ்ஞானிகள் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை . ஆனால் உலகெங்கும் இருந்து விலங்கு நல ஆர்வலர்கள் சோதனை என்ற பெயரில் நாயை சித்ரவதை செய்து கொலை செய்ததாக குற்ற்ம்சாட்டி பெரும் போராட்டங்கள் நடத்தினர் . ஆனால் ரஷ்யாவில் மட்டும் இது தொடர்பாக எந்த சர்ச்சையும் எழவில்லை .



கங்கண சூரியகிரகணம் !
108 வருடங்களுக்கு பிறகு , ஜனவரி 15 -ந்தேதி 2010ல் வருகிறது .
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திரன் மறைக்கப்படுகிறது . இதுவே சந்திர கிரகணம். அது போல சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவது சூரியன் மறைக்கப்படுகிறது . இதுவே சூரியகிரகணம் . உலகில் வருடத்திற்கு 3 முறை சந்திர கிரகணமும் , 2 முதல் 5 வரை சூரிய கிரகணமும் ஏற்படுகிறது .
சூரியனை சந்திரன் நேருக்கு நேர் மறைக்கும்போது அதிகபட்சமாக சூரியனை மறைத்தாலும் சூரியன் ஒரு வளையம் போல தெரியும் . இதுவே கங்கண சூரிய கிரகணம் . அதுவும் உலகில் இது எல்லா இடத்திலும் கங்கண சூரிய கிரகணமாக தெரியாது . கங்கண சூரிய கிரகணம் ஒரு இடத்தில் தெரிந்தால் மீண்டும் அதே இடத்தில் தெரிய 108 ஆண்டுகள் ஆகும் . அதுபோல 108 ஆண்டுகளுக்கு பிறகு கங்கண சூரிய கிரகணம் தமிழ் நாட்டிற்கு ஜனவரி மாதம் 15 -ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தெரியும் .
இந்த சூரிய கிரகணத்தை தமிழ் நாட்டின் தென் மாவட்டங்க்களிலும் , கேரளாவின் தெற்கு பகுதிகளிலும் நன்றாக தெரியும் .
இதற்கு முந்தைய கங்கண சூரிய கிரகனம் தமிழ் நாட்டில் 1901 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்டுள்ளது . இனி அடுத்த கங்கண சூரிய கிரகணம் 20019 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வர உள்ளது .கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது .

எங்கேயாவது ' நல்ல நீர்க் கடல் ' உண்டா ?
கடல் என்றாலே உப்பு நீர்தான் . உப்பின் அளவு மாறுபடலாம் . நல்ல நீர்க் கடல் ?! 6, 000 கி. மீ . நீளம் உள்ள உலகப் பெரும் நதி அமேசான் . உலகத்தின் நல்ல நீரில் ( fresh water ) மூன்றில் இரண்டு பங்கு அந்த நதியில் மட்டுமே ஓடுகிறது ! கடலுக்குள் கலந்த பிறகும் தன் தனித் தன்மையை இழக்காமல் ஆவேசமாகப் போராடும் அந்த நதி -- ஒரு சுத்த வீரன் ! அங்கே அட்லாண்டிக் கடலுக்குள் 180 கி. மீ. தொலைவுக்கு அதன் ஆக்கிரமிப்புத்தான் . அதாவது நல்ல நீர் ! பிறகு போராடி , உப்பு நீரிடம் தோற்கிறது அமேசான் Amaze என்றாலே ஆச்சர்யம் !

ஞாபகமறதி .
நம் மூளை ஒரு நாளைக்கு 10 லட்சம் தடவைக்கு மேல் , நம் சிந்தனைகளை முறைப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது . இதற்கு நம் மூளையில் உள்ள 100 பில்லியன் நரம்பணுக்கள்தான் உதவுகின்றன . இந்த நரம்பணுக்களின் செயல் குறைந்துகொண்டே போய் அவற்றின் திறமைகளெல்லாம் மழுங்கிக்கொண்டே போகும் . இதைத்தான் ' ஞாபகமறதி ' ( அல்ஸிமர் ) என்கிறார்கள் .
மூளையின் மெமரி சிப்ஸில் கோளாறு ஏற்பட்டால் ஞாபக மறதி வரும் .




இரவு என்பது இருக்காது !
ஒரு காலத்தில் நாம் எதெல்லாம் உண்மையாக நடக்க முடியாது என்று சந்தேகப்பட்டோமோ அதெல்லாம் இன்று விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் உண்மையாகி விட்டது . நாளுக்கு நாள் புதுசு புதுசா , தினுசு தினுசா கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன .
புதிதாக ஒன்றை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் . பூமி தன்னைத்தானே சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகிறது . இதனால் பூமியின் ஒரு பகுதி எப்போதும் இருளாகவே இருக்கிறது . இதை மாற்ற வேண்டும் என்ற ஆராய்ச்சி தான் அது .
பூமியில் சூரியனின் ஒளி விழும் நாடுகள் பகலாகவும் , சூரியனின் ஒளி படாத நாடுகள் இருளாகவும் இருக்கின்றன . இது சாதாரண நிகழ்வு .
இரவை பகலாக்கும் முயற்சியில் பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வரக்கூடிய செயற்கை கோளை அமைக்க உள்ளார்கள் . இந்த செயற்கை கோள்கள் சூரிய ஒளியை கவர்ந்து தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும் . அதை உடனடியாக இருளாக இருக்கும் நாடுகள் மீது செலுத்தினால் அந்த நாடுகள் எல்லாம் பகல் போல் காட்சி தரும் . இது மட்டும் சாத்தியமாகி விட்டால் பூமியில் இரவு என்பதே இல்லாமல் போய்விடும் . எப்போதும் பகல் போல் வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும் . இது இயற்கைக்கு முரணானது என்றொரு கருத்தும் நிலவுகிறது . ஆனாலும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது .
அடுத்து வரும் தலைமுறை இரவு என்று ஒரு அற்புதமான நிகழ்வை இழந்து இருப்பார்கள் . இரவு என்றால் என்னவென்று கேட்பார்கள் . இதெல்லாம் கொஞ்ச நாட்களில் நடக்கும் என்கிறார்கள் . எதிர்காலத்தை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் விஞ்ஞானிகள் .


ஐ. எஸ். எஸ்.!-
விண்வெளியில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை ( ஐ. எஸ். எஸ். ) கடந்த 30 ம் தேதி மாலையில் ஏராளமானோர் பார்த்தனர் .
விண்ணில் இருந்தபடி விண்வெளியை ஆய்வு செய்ய அமெரிக்கா , ரஷ்யா , கனடா , ஜப்பான் , மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து 98 ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவி வருகின்றன . இதற்கான கட்டுமானப்பணிகள் வரும் 2010 வரை நடைபெறுகிறது . தற்போது பூமியில் இருந்து 336 முதல் 346 கி. மீ உயர சுற்று வட்டப்பாதையில் விண்ணில் இந்த நிலையம் மணிக்கு 27 ஆயிரத்து 724 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகிறது .
தமிழகத்தில் 30 ம் தேதி மாலை 6 . 24 மணிக்கு வட மேற்கு அடிவானத்தில் தோன்றி தென்கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து 6 .35 மணிக்கு தென்கிழக்கு அடிவானத்தில் மறையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் 4 நிமிடங்களுக்கு மேல் காணமுடியவில்லை . பிரகாசமான நட்சத்திரம் வேகமாக நகர்வதைப்போல தோற்றம் தந்தது . தொலைநோக்கி ஏதுமில்லாமல் வெறும் கண்ணாலேயே பார்க்கமுடிந்தது .


ஸ்டார் சென்சார் .
நட்சத்திரங்களின் இடத்தை வைத்தே பழங்காலங்களில் திசைகளை கண்டுபிடிப்பார்கள் . சந்திராயன் விண்கலத்தில் அதை போன்ற ஒரு செயலையே ' ஸ்டார் சென்சார் ' செய்து வந்தது . நட்சத்திர கூட்டங்களை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்த சென்சார்கள் . அதை வைத்தே விண்கலம் நோக்கியிருக்கும் திசை , நிலவின் தளத்தில் இருந்து விண்கலம் உள்ள உயரம் , விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ள கோணம் போன்ற தகவல்களை துல்லியமாக கணித்து தரும் .


புகை !
ஒளிக்கு நிழல் எப்படியோ , ஞானத்துக்கு அஞ்ஞானம் எப்படியோ , அப்படி அக்கினிக்குப் புகை என்று சொல்வார்கள் விஷயம் அறிந்தவர்கள் . எங்கே சந்தேகம் தொனிக்கிறதோ , அங்கு அறிவு சுடர்விடுகிறது என்று பொருள் . எங்கு நிழலாடுகிறதோ அங்கு ஒளியும் அருகில் இருக்கிறது என்பது அர்த்தம் . " யாண்டு யாண்டு புகை உண்டோ ஆண்டு ஆண்டு நெருப்பும் இருக்கிறது " என்பர் தர்க்க சாஸ்திரிகள் . ஆம் ! நெருப்பு இல்லாமல் புகை வராது . ஆதாரமான விஷயம் அணுவளவும் இல்லாமல் அவதூறோ வதந்தியோ வராது !
புகை மிகவும் நுட்பமானது ; எளிதில் எங்கும் நுழையக் கூடியது . ஆனால் , புகையும் நுழையாதபடி காவல் காக்கப்பட்ட கோட்டைக் கொத்தளங்களை இராவணன் பெற்றிருந்தான் என்று கம்பர் இலங்கையை வர்ணிக்கிறார் . ஆனால் , அப்படிப் புகையும் நுழையாத வாயிலில் பகையாகிய அனுமன் நுழைந்து இலங்கைக்கு நெருப்பிட்டு அந்நகரைப் புகைப் படலத்தின் கீழ் அழுத்தியதை இலங்கை எரியூட்டுப் படலத்தில் நாம் படித்திருக்கிறோம் .இராவணனுடைய பராக்கிரமம் இப்படிப் புகைந்து போனதற்குக் காரணம் என்ன? பிரகாசமாகத் தீட்டப்பட்ட ஓர் ஓவியம் போலிருந்த சீதையை இராமரிடமிருந்து அபகரித்து , அவள் மனத்தை நோகச் செய்து , அவளைப் ' புகையுண்ட ஓவியம் ' போலச் செய்ததால் அல்லவா ?
அறிவின்மைக்கு எடுத்துக்காட்டு ' புகை ' என்பார்கள் சிலர் . அறிவுக்கு எடுத்துக்காட்டு ஜ்வாலை . சாம்பிராணியைத் தூக்கி ஜ்வாலையில் போட்டதும் , அது மங்கி , புகை கிளம்புகிறதல்லவா ? அதை வைத்துக்கொண்டு , அறிவை அமுக்கி அறியாமையை எழுப்புபவர்களை ' மடசாம்பிராணி ' என்றும் அழைக்கிறார்கள் !



H2 O .
இயற்கையின் ஆச்சர்யம் ! 1784 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹென்றி கேவன்டிஷ் என்கிற பிரிட்டிஷ் கெமிஸ்ட் , ஒரு டெஸ்ட் டியூப்பில் ஹைட் ரஜன் ( H ) வாயுவையும் , இன்னொரு டியூபில் ஆக்ஸிஜனையும் ( O ) இருத்தி , ' டியூப் ' களின் வாய்ப் பகுதிகள் வழியாக இரு வாயுக்களையும் கலக்கிவிட்டுப் பிறகு பிரித்தபோது , ' டப் ' என்ற சத்தத்துடன் தண்ணீர்த் துளிகள் உருவாகின . வாயுக்களைக் காணோம் !
இரு வாயுக்கள் இணைந்தால் -- அதாவது இரு அணுக்கள் ஹைட்ரஜன் , ஒரு அணு ஆக்ஸிஜன் -- தண்ணீர் உருவாகும் என்பது அப்போது ஆச்சர்யமான கண்டுபிடிப்பு . ஒரு மாலிக்யூல் தண்ணீய்ரை மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் , நடுவில் உருண்டையாக ஆக்ஸிஜன் அணுவும் , அதன் தலைப் பகுதியில் இரு காதுகள் போல ஹைட்ரஜன் அணுக்களும் -- பார்க்க அப்படியே மிக்கிமவுஸ் தலை மாதிரி காணப்படும் ! 

No comments:

Post a Comment