Friday, May 7, 2010

எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?
இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும். ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான் .




நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா ?


இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறhங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க.
ஓ.கோ.. .* என்னை மாதிரி ஓசில.. . சாப்பிட வந்தவர்தானா நீங்களும். ..*


டாக்டர் * நான் செத்துப் போறh மாதிரி அடிக்கடி கனவு வருது.. .*
கவலைப்படாதீங்க * இனிமே அது கனவுல வராது.




எல்லோரும் இந்த வருடம் கடுமையா வேலை செஞ்சிருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நான் தலா 5000 ரூபாய்க்கு காசோலை தர்றேன்.”


“ரொம்ப நன்றி சார்.”


“இட்ஸ்.. ஓகே. இதே போல அடுத்த வருஷமும் வேலை செஞ்சா இந்த காசோலையில நான் கையெழுத்துப் போட்டுத் தர்றேன்





பள்ளிக்கூடஜோக்ஸ்


ஆசிரியர்:


நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,


அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு


விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?




மாணவன்:


இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு


புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க


முடியாதுன்னு தெரியுது!!




அந்த டாக்டர் குறைவா பேசினாலும் அர்த்தத்தோட பேசுவார்!"
"எப்படி சொல்ற?"


"சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் அப்டீங்கறத `சா'வுக்கு முன் `சா'வுக்கு பின் அப்டீன்னுதான் சுருக்கமா சொல்வார், ஆனா அது எவ்வளவு அர்த்தம் நிறைஞ்சதா இருக்கு பாரு."


ஆசிரியர் : மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்.



சர்தார்ஜி பையன் : நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.


மூன்று மொக்கைகள்:



a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்..


அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?


b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன்,


அப்ப பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?


c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?






ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...


எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...


என்ன கொடும சார் இது?....


____________________________________________________






என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு


முன்னாடி எலுமிச்சம் பழம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான்


கெளம்பனும்...


____________________________________________________






அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல


லைட்டே எரியல?


மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!


____________________________________________________






எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?


?


?


?


?


?


?


4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4


4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4


4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4


நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........


____________________________________________________






“செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..


“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....


____________________________________________________






போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?


டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

____________________________________________________






மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு


இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.


அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா


____________________________________________________






தேர்வு அறையில்...


மாணவன்: ஆல் தி பெஸ்ட்!


மாணவி: ஆல் தி பெஸ்ட்!


மாணவன் பெயில்.... மாணவி 80%


நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....


(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)


____________________________________________________






முடியாது என்று சொல்பவன் முட்டாள்...


முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...


இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?


____________________________________________________






கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?


மனைவி: பல்லி விழும் பலன்...


கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?


மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...


____________________________________________________






நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது


தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது


என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர்


படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...


“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

No comments:

Post a Comment